கோவில்பட்டி அருகே மனைவி வேறொருவருடன் ஒன்றாக இருந்ததை பார்த்த கணவன், இருவரையும் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் காலனி, கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம். மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த ராமமூர்த்திக்கும், சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இது சண்முகத்திற்கு தெரிய வர இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். அதற்கு இருவரும் சத்தியம் செய்து மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பின்பும், இருவரும் வழக்கம்போல ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த ஊரில் தண்ணீர் திறந்து விடுவது, மின்சார வேலைகள் செய்து தருவது என அனைவருக்கும் நல்ல பிள்ளையாக இருந்த காரணத்தால் ராமமூர்த்தி மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.
தபால் துறையில் வேலை- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
இந்தநிலையில் நேற்றிரவு சண்முகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதிகாலையில் வீட்டின் உள் அறையில் சத்தம் கேட்டு சண்முகம் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மாரியம்மாளும் ராமமூர்த்தியும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், ஆத்திரத்தில், ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டிக்கொலை செய்தார். மேலும், அருகில் இருந்த தனது மனைவியையும் வெட்டிப் படுகொலை செய்தார்.
(கணவர் சண்முகம்)
தீப்பிடித்து எரிந்த வீடு: 7 பேரைக் காப்பாற்றிய 5 வயது சிறுவன்!
பின்னர், பசுவந்தனை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆஜராகி, தான் கொலை செய்த விபரங்களை சண்முகம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்