கேரளாவில் இனி தண்ணீர் பாட்டிலை ரூ.13க்கு தான் விற்க வேண்டும் என அம்மாநில அரசு விலை நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தண்ணீர் பாட்டில்களின் விலை ரூ.20 மற்றும் ரூ.25 என விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக பேருந்து நிலையங்கள், தியேட்டர்கள், சுற்றுலா தளங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரத்திற்கு ஏற்றாற்போல கூடுதல் விலைக்கு தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலை கேரளாவிலும் உள்ளது. இதனை மாற்ற அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் முடிவில் தண்ணீர் என்பது அத்தியாவசியப் பொருள்களுள் ஒன்று என்ற அடிப்படையில், அதற்கு அரசே விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக கேரளாவில் உள்ள தண்ணீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுடன் அம்மாநில அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
பேச்சுவார்த்தையின் போது ரூ.12க்கு ஒரு பாட்டில் தண்ணீரை விற்க வேண்டும் என கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் இறுதியாக ரூ.13க்கு ஒரு பாட்டில் தண்ணீரை விற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதனை கேரள அரசு உத்தரவாக பிறப்பித்துள்ளது. மேலும், விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் இந்திய தரச்சான்று தன்மையுடன் இருக்க வேண்டும் என அரசு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்