ஐஐடியில் படித்து வருமான வரித்துறை அதிகாரி ஆக இருந்த கெஜ்ரிவால் பின்னர் ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகவும் உருவெடுத்தார். 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களை பிடித்தது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் முதல் முறையாக முதலமைச்சரானார் கெஜ்ரிவால். ஆனால் அவரது ஆட்சி 45 நாட்கள் மட்டுமே நீடித்தது. லோக்பால் சட்டத்தை அமல்படுத்தாததை எதிர்த்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்.
2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியிடம் கெஜ்ரிவால் தோற்றார். ஆனால் 2015-ஆம் ஆண்டு டெல்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அதிசயக்கத்தக்க வெற்றியுடன் அரியணை ஏறியது. மொத்தம் உள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது ஆம் ஆத்மி. 54% வாக்குகளை அக்கட்சி அள்ளியது.
இந்த தேர்தலில் தங்கள் ஆட்சியின் வளர்ச்சித் திட்டங்களை பிரதான ஆயுதமாக கையில் எடுத்து கெஜ்ரிவால் பரப்புரை மேற்கொண்டார். கெஜ்ரிவாலின் ஆட்சி காலத்தில் அவர் கொண்டுவந்த வளர்ச்சி திட்டங்கள் ஏராளம். அவற்றில் குறைசொல்லும் அளவுக்கு பாஜகவிடமோ, காங்கிரஸிடமோ பெரிதாக காரணங்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் டெல்லியில் கடந்த 20 வருடங்களாக அரியணையில் ஏற முடியாமல் இருக்கும் பாஜகவின் காத்திருப்பு இன்னும் நீடிக்கிறது. ஆம், இந்த தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சியே மூன்றாவது முறையாக அரியணையில் ஏற உள்ளது. பாஜக 12 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
அப்படி எந்தவிதமான தேர்தல் வியூகங்களை கெஜ்ரிவால் கையில் எடுத்தார் என்று தோன்றுகிறதா? மற்றவர்களின் விமர்சனங்களை காதில் வாங்காமல் அவரின் குறிக்கோளை மட்டுமே மனதில் வைத்து பயணித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.
பாஜக, அரவிந்த் கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தது. ‘தீவிரவாதி’ போன்ற விமர்சனங்களும் அவர் மீது மறைமுகமாக முன்வைக்கப்பட்டன. அமித்ஷா, மோடி ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு இந்து விரோதி என்ற நோக்கில் பரப்புரையை பாஜக மேற்கொண்டது. இங்குதான் பாஜகவின் வியூகம் சறுக்கியது என்றே சொல்லலாம்.
பாஜகவின் கடும் விமர்சனங்களை கவனமாக கையாண்ட அரவிந்த் கெஜ்ரிவால் சிறுபான்மையினர் வாக்குகள் தனக்கு கண்டிப்பாக உண்டு என நம்பினார். அதனால் அவர் செய்த வளர்ச்சி திட்டங்களான 20,000 லிட்டர் வரை மாதாந்திர குடிநீர் பயன்பாட்டுக்கு கட்டணம் கிடையாது, 200 யூனிட் வரை மாதாந்திர மின்சார நுகர்வுக்கு கட்டணம் கிடையாது, 400 யூனிட் வரை பயன்படுத்தினால் மானிய கட்டணம்தான், அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்பட்டது, பெண்களுக்கு டி.டி.சி பேருந்துகளில் இலவச பயணம், தனியார் பள்ளிகளில் கட்டண உயர்வுக்கான நெறிமுறைகள் போன்றவற்றை மக்களுக்கு தெரியுமாறு பரப்புரை மேற்கொண்டார்.
மேலும் டெல்லியில் பாஜகவால் எளிதாக இந்து மக்களின் வாக்குகளை பெற முடியவில்லை. தனது வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல் அனைத்து மக்களையும் சென்று சேர சமூக வலைதளத்தை பக்காவாக பயன்படுத்தினார் கெஜ்ரிவால். பிரசாந்த் கிஷோரும் பக்கபலமாக இருந்தார். வளர்ச்சி என்ற ஒற்றைச் சொல்லை உள்ளடக்கியே அரவிந்த் கெஜ்ரிவாலின் பரப்புரை இருந்தது. இந்துக்களின் வாக்குகளை சம்பாதிக்க அவர் பெரிதாக மெனக்கெடவும் இல்லை. இதனை உணர்ந்து கொண்ட டெல்லி வாழ்மக்கள் 3-வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் அரியணையில் ஏற வழிவகுத்துத் தந்துள்ளனர்.
Loading More post
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு; இன்று ஒப்பந்தம் கையெழுத்து!
”சீட் குறைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் தவறுதான் காரணம்” - ப.சிதம்பரம்
இறுதியாகும் பேச்சுவார்த்தை... ஐபிஎல் அட்டவணை வெளியீடு... இன்னும் சில முக்கியச் செய்திகள்
பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை? - அதிமுகவுடன் பேச்சுவார்த்தை
சூடு பறக்கும் தமிழக தேர்தல் களம்: இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள கூட்டணி பேச்சுவார்த்தை!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!