எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ. வில்சன் கடந்த 8ஆம் தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும் கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவ்பீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரும் கர்நாடக மாநிலம் உடுப்பியில் பிடிபட்டனர். அவர்கள் மீது உபா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் சமீமுக்கு உதவி செய்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை கன்னியாகுமரி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வில்சன் கொலை வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா!
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி