குரூப் 4 தேர்வு முறைகேடு புகாருடன் தொடர்புடையதாக கருதப்படும் 39 பேருக்கு பதிலாக புதிய தேர்ச்சிப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி ஊழியர், பிற துறைகளைச் சேர்ந்தவர், இடைத் தரகர்கள், முறைகேடாக தேர்வில் வெற்றி பெற்றவர்கள் என இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக முக்கிய இடைத்தரகராக செயல்பட்ட ஜெயக்குமாரை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்புடைய 39 பேருக்கு பதிலாக புதிய தேர்ச்சிப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட நிலையில் இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிய தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நாளை முதல் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 7 ஆம் தேதி வரை சான்றிதழ்களை இணையதள வழியாக பதிவேற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்