இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அருகே அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி சுலைமான் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரான் - அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. எவ்வித அத்தியாவசிய தேவையின்றி இந்தியர்கள் ஈராக் செல்ல வேண்டாம் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், ‘ஈராக் நாட்டுக்குச் செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும்.
ஈராக்கில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையாக இருங்கள். ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை பாக்தாத், எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் செய்கின்றன’ எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஈரானில் 180 பேருடன் விழுந்து நொறுங்கிய உக்ரைன் நாட்டு விமானம்
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்