சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பாஜகவினர் பேரணியாக சென்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி, உத்தரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் வன்முறைகளும் ஏற்பட்டு, 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதவிர அரசியல் தலைவர்கள் பலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவித்தனர்.
இதுஒருபுறம் இருக்க மற்றொருபுறம் பாஜகவினர் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக நாடு முழுவதும் பிரச்சாரம் மற்றும் பேரணியை நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் கோவை உள்ளிட்ட இடங்களில் ஆதரவு பேரணிகள் நடத்தப்பட்டன. உள்துறை அமித்ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பாஜகவினர் சார்பில் குடியுரிமை சட்டத்திருத்த ஆதரவு பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலச் செயலாளர் வானதி சீனிவாசன், பாஜக மூத்த தலைவர்கள் இல.கணேசன் மற்றும் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?