காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்தது. நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. வேளாங்கண்ணி, திருக்குளவை, திட்டச்சேரி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதேபோல், கடலூர், விருத்தாசலம், சேலம் போன்ற இடங்களிலும் மழை பொழிந்தது.
இந்நிலையில் வளிமண்டலத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகி பாபுவிடம் கால்ஷீட் வாங்கித் தருவதாக 10 லட்சம் மோசடி : போலீசில் புகார்
Loading More post
"உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு"- ஸ்டேட்டஸ் மூலம் விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள்!
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!