ஆஸ்திரேலியாவில் எரிந்துவரும் காட்டுத்தீயை அணைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடவும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
சிட்னியில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி கைப்பற்றும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென அந்நாட்டு பந்துவீச்சாளர்கள் அறிவித்துள்ளனர். அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் லின், தான் பிக் பேஷ் லீக் தொடரில் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சுமார் 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தெரிவித்துள்ளார். பிக் பேஷ் லீக்கில் விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் FAWAD AHMED, தான் வீழ்த்தும் ஒவ்வொரு விக்கெட்டுக்கும் மற்றும் விளாசும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் சுமார் 12 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இதேபோல, ஆஸ்திரேலிய வீரர்கள் பீட்டர் சிடில், ஆடம் ஸாம்பா, கனே ரிச்சர்ட்ஸன் ஆகியோரும் பிக் பேஷ் லீக்கில் தாங்கள் வீழ்த்தும் விக்கெட்டுகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க அந்நாட்டு அரசு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'