ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை திமுக திட்டமிட்டு தாமதப்படுத்துவதாக அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பல வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குவாதங்களும், கை கலப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்த இடங்களுக்கு, முடிவுகள் அறிவிக்கவில்லை என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த நீதிமன்றம், மனுவாக தாக்கல் செய்துவிட்டு நாளை முறையிடும்படி தெரிவித்தது.
இந்நிலையில் திமுகவை எதிர்த்து அதிமுக சார்பில் பொன்னையன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர். அதில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை திட்டமிட்டு திமுக தாமதப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!