கோவை பன்னிமடையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மற்றொரு நபரின் தொடர்பு குறித்து விசாரணை செய்ய புதிய பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த மார்ச் மாதம், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கில் குற்றவாளியான தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே சிறுமியின் பாலியல் வன்கொடுமையில் மற்றொரு நபருக்கு தொடர்பு இருப்பதாக டிஎன்.ஏ சோதனையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இதுகுறித்து மேல் விசாரணை செய்யக்கோரி உயிரிழந்த சிறுமியின் தாயார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், தகுதியான திறமையான பெண் அதிகாரியை நியமனம் செய்து விசாரிக்க மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிட்டது. அதன்படி எஸ்.பி.சுஜித்குமார் தலைமையில் ஏடிஎஸ்பி அனிதா, டிஎஸ்பி மணி ஆகியோரின் மேற்பார்வையில் கோவை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் அனந்தநாயகி துடியலூர் சிறுமியின் வழக்கு தொடர்பாக விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான விசாரணைகள் தற்போது துவங்கப்பட்டுள்ளது. சிறப்பு அதிகாரி அனந்தநாயகி இந்தாண்டு தமிழக முதலமைச்சரின் சிறந்த புலன் விசாரணை அதிகாரிக்கான பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!