அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் 4-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இயங்கும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்குப் பின்னர் ஜனவரி 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் 2-ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதாலும், அதற்காக அரசு ஆசிரியர்கள் பணிபுரிவார்கள் என்பதாலும் பள்ளி திறப்பு 3-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் 3-ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை தொடரலாம் என தேர்தல் அதிகாரிகள் வட்டாரத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பை 4-ஆம் தேதிக்கு பள்ளிக் கல்வித்துறை மாற்றியிருக்கிறது. இந்த அறிவிப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
“தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது” - ராகுல் காந்தி
குடியரசு தின அணிவகுப்பில் வீறு நடை போட உள்ள வங்கதேச ராணுவ படை!
"அந்த வாய்ப்பு மட்டும் கிடைத்தால் அது ஒரு வரம்”- வாஷிங்டன் சுந்தர்
அதிமுகவிற்கு பிரேமலதா விஜயகாந்த் நிபந்தனை?
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது: விக்டோரியா மருத்துவமனை தகவல்
கண்ணான கண்ணே.. மகள்களுடன் புகைப்படங்களை பகிரும் பிரபலங்கள்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!