அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தனது ஊழியர்களின் நவம்பர் மாத சம்பளத்திற்காக ரூ.800 கோடியை தற்போது விடுவித்துள்ளது.
இதுதொடர்பாக பேசிய பிஎஸ்என்எல்-லின் நிர்வாக இயக்குநரான பிகே புர்வார், “ ஊழியர்களின் நவம்பர் மாத சம்பளம் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இன்று மாலை அல்லது நாளை காலையில் பணம் ஏறிவிடும்” எனத் தெரிவித்தார்.
தமிழக காவல்துறையில் எஸ்.ஐ பணி தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
ஊழியர்களுக்கு மாத சம்பளம் எப்போது சரியான நேரத்தில் வரும் என பிகே புர்வாரிடம் கேட்டபோது, அதுகுறித்த விவரங்கள் தெரிய மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை ஆகும் என்றார். எனினும் ஜனவரி 31-ஆம் தேதிக்குப் பின் அதுகுறித்த தெளிவு ஓரளவு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார் பிஎஸ்என்எல்-லின் விருப்ப ஓய்வு திட்டத்தை தேர்வு செய்த கிட்டத்தட்ட 70,000 ஊழியர்கள் ஜனவரி 31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ளனர். அதன்பின் எந்த தேதியில் சம்பளம் வழங்கப்படும் என்ற தெளிவு கிடைக்கக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
நவம்பர் மாதத்திற்கான சம்பளத்தை டிசம்பர் 30-ஆம் தேதி அதாவது கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் கழித்து, அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் விடுவிடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை