ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள், நேற்று வெளியாகின. இதில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியில் 47 இடங்களை பிடித்தன. ஆளும் கட்சியாக இருந்த பாஜக 25 இடங்களை பிடித்தது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக தேர்தலில் களமிறக்கப்பட்ட ஹேமந்த் சோரனே முதல்வராக பதவியேற்பார் என அறிவிப்பு வெளியாகியது.
இந்நிலையில் இன்று ஜார்க்கண்ட் ஆளுநர் திரெளபதி முர்முவை ஹேமந்த் சோரன் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து வரும் 29ஆம் தேதி ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹேமந்த், தங்களுக்கு 50 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறினார். அத்துடன் 29ஆம் தேதி பதவியேற்பதாகவும் உறுதியளித்தார்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை