உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் பொதுமக்கள் பொங்கல் பரிசை வாங்கிக்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், அதிமுக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவாக வாக்கு சேகரித்து பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கடந்த ஆண்டு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் ரூ.1000 வழங்க இருந்தபோது, திமுக நீதிமன்றம் சென்றதால் வழங்க முடியவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், வழக்கமாக பொங்கல் பரிசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவீங்க, இப்போது ஓட்டு போட்டுவிட்டு பொங்கல் பரிசு வாங்கிக் கொள்ளுங்கள் என பேசினார். அவரது இந்தப் பேச்சு வாக்குக்கு பரிசு கொடுப்பதுபோல உள்ளதாக பலரும் கூறியதால் சர்ச்சை எழுந்தது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!