இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கும் சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி அளித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் இரண்டு வாரங்களாக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. உத்தரப் பிரதேசத்தில் நடந்த போராட்டங்களின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும் டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் போராட்டம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசித்தாக தெரிகிறது. அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்பது அதிமுகவின் நீண்ட நாள் கோரிக்கை எனவும், அதனை நிறைவேற்ற வேண்டும் என்றும் அமித் ஷாவிடம் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாக தெரிவித்த அமித் ஷா, சரியான நேரத்தில் இது தொடர்பான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என உறுதி அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்திருக்கும் நிலையில், அது குறித்த தெளிவான விளக்கம் அளிப்பதற்கான பரப்புரை கூட்டம் நடத்துவது என பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
Loading More post
அதிமுக, திமுக கூட்டணிகளின் தொகுதிப் பங்கீடு நிலவரம்: ஒரு அப்டேட் பார்வை
அமமுக தலைமையை ஏற்றால் அதிமுக-பாஜகவுடன் கூட்டணிக்கு தயார் - டிடிவி தினகரன்
“திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான் ஒரே இலக்கு”- டிடிவி தினகரன்
'சாகச' பிரசாரம், வைரல் 'கன்டென்ட்'... இளையோர் வாக்குகளை ஈர்க்க ராகுல் முயற்சிக்கிறாரா?
'22 யார்டு' அக்கப்போர்... இந்தியாவின் பிட்ச் தயாரிப்பு முறை தவறானதா? - ஒரு பார்வை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?