இந்த முறை கடுமையாக பயிற்சி மேற்கொண்டு உள்ளதாகவும், சிறப்பாக விளையாடுவேன் என்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை ராஜஸ்தான் அணி இம்முறை ரூ.4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. கடந்த முறை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வருணை ரூ 8.4 கோடிக்கு வாங்கியது. ஆனால் அவருக்கான வாய்ப்பும் சரியாக வழங்கப்படவில்லை, மேலும் கிடைத்த சில வாய்ப்புகளிலும் வருணால் ஜொலிக்க முடியவில்லை.
இது குறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில், “மீண்டும் ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியில் வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது,. கடுமையாக பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன், இந்த முறை கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவேன் என நம்பிக்கையுடன் உள்ளேன். தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் எனக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார். கொல்கத்தா அணியில் அவரின் தலைமையின் கீழ் சிறப்பாக விளையாடுவேன்” என்றார்.
மேலும், “எந்த ஆடுகளம் என்பதை நான் பார்ப்பதில்லை, அது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் நமது 100 % ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன்” என்றார் வருண் சக்கரவர்த்தி.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?