உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணின் புகாருக்கு நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த அந்த பெண் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக தீக்குளித்தார். ஹசன்கஞ்ச் நகரில் உள்ள காவல்நிலையத்தில் தீக்காயங்களுடன் பெண் நுழைந்ததை கண்டு காவல் கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், அந்தப் பெண் கான்பூரில் உள்ள மருத்துவமனையில் 70 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் 4 பேர் தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் முன்ஜாமீன் பெற்று விட்டனர் என்றும் அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவருக்கும், அந்த பெண்ணுக்கும் 10 ஆண்டுகளாக பழக்கம் இருந்துள்ளது என்றும் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் நிர்ப்பந்தம் செய்தை அந்த நபர் ஏற்றுக்கொள்ளவில்லை என கண்காணிப்பாளர் விக்ராந்த் வீர் தெரிவித்தார். அந்த பெண்ணிடம் வாக்குமூலம் பெற முயன்ற போது பேசும் நிலையில் அவர் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Loading More post
"முழு முடக்கத்தை தடுக்க முடியும்!" - நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி உறுதி
கொரோனா 2-ம் அலை தீவிரம்: நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி!
'கொரோனா சூழல்... அடுத்த 3 வாரங்கள் மிகவும் முக்கியமானவை' - நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர்
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்