ஊக்கமருந்து தொடர்பாக சமர்ப்பிக்கப்படும் அறிக்கையில் முறைகேடு செய்ததால், ஒலிம்பிக் உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச போட்டியிலும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரஷ்யா பங்கேற்க சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தடைவிதித்துள்ளது.
ஊக்கமருந்து தொடர்பான அறிக்கையில் முறைகேடு செய்ததாக ரஷ்யா மீது புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தது. ரஷ்யா முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு ரஷ்யா, எந்த ஒரு சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே 2020-ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக், 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றில் ரஷ்யா பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்போட்டிகளின் போது ரஷ்ய நாட்டுக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தனிப்பட்ட முறையில் ஊக்கமருந்து சோதனையில் தேர்ச்சி அடையும் பட்சத்தில், ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
ம.நீ.ம, சமக, ஐ.ஜே.கே கூட்டணி உறுதி - சரத்குமார் அறிவிப்பு
சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அதிமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் தமாகா
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
சாம்சங் கேலக்ஸி A32 விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?