மயிலாடுதுறை அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போக்சோவில் போலீசார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கந்தமங்கலம் பகுதியை சோந்தவர் மகாராஜா(30). விவசாய தொழிலாளி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமிக்கு மகாராஜா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதையறிந்த மகாராஜா அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதையடுத்து உறவினர்கள் சிறுமியை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து மகாராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் தடுப்பூசி திருவிழா தொடக்கம்!
பெரிய அளவில் முழு ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்பில்லை - நிர்மலா சீதாராமன்
மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே ரெம்டெசிவிர் மருந்து: மத்திய அரசு
ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!