கும்பகோணம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த அரசு கோப்புகளை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணத்தில் கொட்டையூர் கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இங்கு அப்பகுதி கிராமங்களின் அரசு பதிவேடுகள், சிட்டா அடங்கல் மற்றும் வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்தன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த சிலர், இந்த அலுவகத்தின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருள்களை அடித்து உடைத்து நாசம் செய்தனர். இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு இந்த அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஆவணங்களை தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.
அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் அசாருதீனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்ட காவல் துறையினர் தீயை அணைத்தனர். இதில் நாகக்குடி கிராம மக்களின் ஆவணங்கள் முற்றிலும் எரிந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
டெல்லி டிராக்டர் பேரணியில் விவசாயிகள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு
முருகன் கோயில்களில் தமிழில் வழிபாடு நடத்த முடியுமா? - முதல்வர் பழனிசாமிக்கு ஆ.ராசா கேள்வி
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!