தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்தது பிடிக்கவில்லை எனக்கூறி 400 சிவசேனா தொண்டர்கள் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிரா ‘விகாஸ் அகாதி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளன. மகாராஷ்டிராவின் முதலமைச்சராக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பதவியேற்றுள்ளார். இந்நிலையில் சிவசேனாவைச் சேர்ந்த 400 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைத்தது தங்களுக்கு பிடிக்கவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையின் தாராவி பகுதியில் நடந்த பாஜக கூட்டத்தில் சிவசேனாவைச் சேர்ந்த 400 தொண்டர்களும் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய தொண்டர் ஒருவர், நான் சிவசேனா கட்சிக்காக கடந்த 10 வருடங்களாக உழைத்து வருகிறேன். நான் இந்துத்துவாவுக்கு ஆதரவு தெரிவித்தே அந்தக் கட்சியில் பணியாற்றினேன்.
சிவசேனா கட்சி மூலம் மக்களுக்கு பணியாற்ற நினைத்தேன். ஆனால் சிவசேனா கட்சி தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரசுடன் கூட்டணி வைத்துவிட்டது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தற்போது நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம் என தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் இன்று முதல் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு
"முதல்வர் பழனிசாமி 234 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக வருவார்" - ஓ.எஸ்.மணியன்
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) காலமானார்
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?