ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலைசெய்து கொண்ட நிலையில், அவரது வீட்டில் அவரது மகனும் மனைவியும் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கட்டளை குடியிருப்பு பகுதியில் வறுமை காரணமாக மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு ஆட்டோ டிரைவர் கந்தசாமி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இன்று காலை கந்தசாமி வீட்டு கதவு பூட்டி இருந்த நிலையில் உறவினர்கள் அதிக நேரம் கதவு திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது கந்தசாமி தூக்கில் தொங்கிய நிலையில் அருகே அவரது மனைவி இரத்தம் கக்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். கூடவே 6 வயது குழந்தை ஒன்று கழுத்தில் துண்டால் நெரிக்கப்பட்ட இறந்து கிடந்துள்ளது. இந்நிலையில் சுவரில் எங்கள் சாவிற்கு வறுமை தான் காரணம் என எழுதி இருந்து. உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. விரை வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் மனைவி மற்றும் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின்னர் கந்தசாமி தூக்கில் தொங்கி இறந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. மேலும் மற்றொரு மகன் ஏகாந்த மூர்த்தி என்ற 2 வயது சிறுவன் மட்டும் வீட்டிற்குள்ளிருந்து உயிருடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Loading More post
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குங்கள்! - தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு ஆணை
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்