கடந்த 2 நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டநிலையில் தற்போது அவர் எழுதிவைத்திருந்த கடிதம் கிடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்த சிங்கம் என்பவரது மகன் பாலாஜி. இவர் உசிலம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இதைத்தொடர்ந்து பாலாஜி கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த போலீசார் பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவர் பாலாஜி தனது நோட்டில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதைப்பார்த்த பெற்றோர் அந்தக் கடிதத்தை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்தக் கடிதத்தில் “என் சாவுக்கு காரணம் ரவி. அவன் என்னை கொடுமை செய்தான். எனது ரத்த கண்ணீருக்கு காரணம் ஆசிரியர் ரவி தான். எனது சொந்த பந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் எனது வணக்கங்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை அடிப்படையாக வைத்து உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!