மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் அடித்து விரட்டியனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள நடூர் என்ற இடத்தில் ஏடி காலனியில் இருக்கும் 4 வீடுகள் அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். பொதுமக்களின் உதவியோடு 7 பெண்கள், 2 சிறுவர்கள் உள்பட 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட உடல்கள் கூராய்வுக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
உயிரிழந்தோருக்கான நிவாரணத்தை 25 லட்சமாக உயர்த்தித்தரவும், விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மற்றும் போராட்டக்காரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் அடித்து விரட்டினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன்? - இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கம்
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி