தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகரும் என்றும் அதனால் கேரள மாநிலத்தில் மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
முன்னதாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், சென்னையில் மிதமானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்றும் தெரிவித்தார். மேலும், குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
Loading More post
"உங்கள் பிரைவஸிக்கு நாங்கள் பொறுப்பு"- ஸ்டேட்டஸ் மூலம் விளக்கம் கொடுத்த வாட்ஸ்அப்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள்!
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!