மேற்கு வங்கத்தின் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தின் காரக்பூர் சதார், கரீம்பூர், கலியா கஞ்ச் ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. ஆரம்பம் முதலே 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் 3 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காரக்பூர் சதார், கலியா கஞ்ச் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஒரு தொகுதியான கரீம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
கலியா கஞ்ச் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் தபான் தேப் சின்ஹா, பாஜகவின் கமல் சந்திரசேகரை 2417 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்ததாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதேபோல், காரக்பூர் சதார் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் பிரதீப் சர்கர், பாஜக வேட்பாளர் பிரேம் சந்திரஜாவை 20,788 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கரீம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் பிமலேந்து சின்ஹா பாஜகவின் ஜெய் பிரகாஷ் மஜூம்தரை விட 23000 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “எங்கள் வெற்றியை வங்காள மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். இது மதசார்பின்மை மற்றும் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி. பாஜக தனது அதிகார ஆணவ போக்கிற்காகவும், மாநில மக்களை அவமதித்ததற்காகவும் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த மண்ணின் மக்களை அவமரியாதை செய்ததன் பலனை பாஜக அனுபவிக்கிறது. சிபிஎம் மற்றும் காங்கிரஸ், தங்களை பலப்படுத்த முயற்சிப்பதற்கு பதிலாக, மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு உதவுகின்றன” எனத் தெரிவித்தார்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’