ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் முதல் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆக்ஷன் வகையில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவர் இசையில் உருவாகியுள்ள பாடல்களை வரும் 7-ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
அதற்கு முன்பாக இன்று மாலை படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை சிங்கில் ட்ரேக் முறையில் வெளியிடுகின்றனர். அந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியுள்ளார். 'நெருப்பு பேரோட' என தொடங்கும் தர்பார் பாடல் படத்தின் ஓப்பனிங் பாடலாக அமைந்துள்ளது. பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் அனிருத் இரண்டாவது முறை இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்