மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆளுநரை சந்திக்கவுள்ளார்.
மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சராக சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பதயேற்க உள்ளார். சிவசேனா கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற குழுத் தலைவராக ஒருமனதாக அவர் தேர்வானார். மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் விலகியதைத் தொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. 3 கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சியமைப்பதற்கான தீர்மானம் முதலில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து உத்தவ் தாக்கரே வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை ராஜிவ் பவனில் சென்று உத்தவ் தாக்கரே சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். முன்னதாக, வீட்டிலிருந்த தனது தந்தை பால் தாக்கரேவின் புகைப்படத்திற்கு உத்தவ் தாக்கரே மரியாதை செய்தார்.
Loading More post
தமிழகத்தில் இன்று 160 இடங்களில் கோவிஷீல்டு, 6 பகுதிகளில் கோவாக்சின் செலுத்த ஏற்பாடு!
காணும் பொங்கல் கொண்டாட கட்டுப்பாடுகள்: கடற்கரைகளில் காவல் துறை கண்காணிப்பு தீவிரம்!
நாடு முழுவதும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி: மக்கள் விவரமறிய 'டோல் ஃப்ரீ' எண் வெளியீடு
டாப் செய்திகள்: கொரோனா தடுப்பூசி முதல் ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டி வரை!
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்