மகாராஷ்டிராவில் பட்னாவிஸ் பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக 3 கட்சிகள் தொடர்ந்த அவசர மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாரதிய ஜனதாவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் அஜித் பவார் பதவி ஏற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் பட்னாவிசை பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து சிவசேனா, தேசிவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இன்று இரவே அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் பாஜக நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அவசர மனுவை நாளை காலை 11.30 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!