திண்டிவனம் அருகே ஏ.டி.எம்மில் பணம் திருட முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நேரு வீதியில் பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் ஒன்று உள்ளது. இங்கு ஊழியர்கள் சாவியை மறந்து வைத்து விட்டு சென்றுள்ளனர்.
நேற்று காலை 10 மணியளவில் ஏடிஎம் மையத்திற்கு வந்த நபர் ஒருவர் சாவியை பார்த்தவுடன் அதை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் இரவு நேரத்தில் ஏடிஎம் மையத்திற்கு வந்த அந்த நபர், ஏடிஎம்-ஐ திறக்க முயன்றுள்ளார். அப்போது ஏடிஎம்மில் இருந்த அலாரம் ஒலிக்கவே அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் திண்டிவனம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் அந்த நபர் திண்டிவனத்தை சேர்ந்த சுகுந்தன்(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சுகுந்தனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி