ராஜஸ்தானில் 21 வயதில் நீதிபதியாகி வாலிபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் மயங்க் பிரதாப் சிங் (21). இவர் ராஜஸ்தான் பல்கலைக் கழகத்தில் 2014-ஆம் ஆண்டு இளநிலை சட்டப்படிப்பில் சேர்ந்தார். இந்த ஐந்து வருட படிப்பு, இந்த வருடம் நிறைவு பெற்றது. இதையடுத்து அவர் நீதித்துறை பணிகளுக்கான தேர்வு எழுதினார். இத் தேர்வை எழுத குறைந்தபட்சமாக 23 வயது நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த விதி, தளர்த்தப்பட்டு 21 வயதாகக் குறைக்கப்பட்டது.
இதனால் தனது 21 வயதில் இந்த தேர்வை எழுதிய சிங் முதல் முயற்சியிலேயே தேர்ச்சிப் பெற்றுள்ளார். விரைவில் அவருக்கு நீதிபதி பதவிக்கான அரசாணை வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் இளம் நீதிபதி என்ற சாதனையை அவர் படைக்க உள்ளார்.
இதுகுறித்து சிங் கூறும்போது, “முதல் முயற்சியிலேயே நீதித்துறை தேர்வில் நான் தேர்ச்சி பெற்றதற்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு நன்றி. வயது குறைக்கப்பட்டதால்தான் என்னால் இத்தேர்வை எழுத முடிந்தது. நான் தேர்வாகி இருப்பதன் மூலம் அதிகமான மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களுக்காக கடிமாக உழைப்பேன்” என்றார்.
Loading More post
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3ஆவது நாளாக வேலை நிறுத்தம்: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு!
'அதிமுக-பாஜக தொகுதிப் பங்கீடு எப்போது? எதிர்பார்ப்பு என்ன?': கிஷன் ரெட்டி சிறப்பு பேட்டி
இன்று தமிழகம் வரும் ராகுல்காந்தி: தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'