கிருஷ்ணகிரி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்டுத்தரக்கோரி மத்தூர் காவல் நிலையம் முன்பு ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
போச்சம்பள்ளி அடுத்த வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது கூட்டு குடும்பத்தில் 20ற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவருக்கு சொந்தமான சுமார் 3 சென்ட் இடத்தை இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் அருணாச்சலம், கேசவன் ஆகியோர் ஆக்கிரமித்து விட்டதாக மத்தூர் காவல் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்திருந்தார். இது சம்மந்தமாக வழக்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று திடீரென எதிர்தரப்பினர் ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் எழுப்ப முயற்சிப்பதாக மத்தூர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் பழனிவேலிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி இன்று காலை காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் தீக்குளிக்க முயசித்தார். 2 பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் கையில் வைத்திருந்த மண்ணென்னை கேனில் இருந்த மண்ணெண்ணையை அனைவரது தலையில் ஊற்றி தீ வைக்க முயற்சித்தனர்.
அதற்குள்ளாக அங்கிருந்த போலீசார் அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி தடுத்தனர். மத்தூர் காவல் நிலையம் முன்பு குடும்பத்துடன் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Loading More post
தமிழகத்தில் ஒரே நாளில் 10,986 பேருக்கு கொரோனா
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
இரவு நேர ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால்
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
மாஸ்க் அணியாததை தொடர்ந்தால் ரூ.10,000 அபராதம் - உ.பி. அரசு அதிரடி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை