அமேசான், ஃப்ளிப்கார்ட் வால்மார்ட், நிறுவனங்களை தடைசெய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கடைக்கு சென்று வாங்கி வந்த காலம் மலையேறிவிட்டது. தற்போது என்ன வேண்டுமானாலும் வீடு தேடி வந்து டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனங்கள் அதிகரித்து விட்டன. அதில் மிகவும் பிரபலமாகியிருப்பது அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் என்றால் அது மிகையல்ல.
இந்நிலையில், அமேசான், ஃப்ளிப்கார்ட், வால்மார்ட் நிறுவனங்களை தடை செய்ய வலியுறுத்தியும் இந்த நிறுவனங்களால் சிறு குறு வணிகர்கள், ஏஜென்சிகள், வியாபாரிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறி நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நகராட்சி அலுவலகம் முன்பு நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் உடனே இந்த நிறுவனங்களை தடை செய்ய வேண்டும் எனவும் விநியோகஸ்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த ஆர்பாட்டம் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை வணிகர்கள், சிறுகுறு வியாபாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’