முறையாக பள்ளிக்கு ஆசிரியர் வருவதில்லை என மாணவர்களின் பெற்றோர் பள்ளியை பூட்டு போட்டு போராட்டம் நடத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மகேந்திரவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 82 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக புவியரசு, ஆசிரியராக சுகுணா செல்வகுமாரி ஆகிய இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் இன்று பள்ளியின் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது அவர்கள், “மாணவர்களின் சதவிகிதத்தை வைத்து பார்க்கும் போது இந்தப் பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். மேலும் தலைமை ஆசிரியராக பணியாற்றும் புவியரசு பள்ளிக்கு முறையாக வருவதில்லை” போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை கிராம மக்கள் முன்வைத்தனர். அத்துடன் பள்ளியை என்று பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாணாவரம் காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெற்றோர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர்கள் உறுதியளித்தை தொடர்ந்து பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Loading More post
ஆபத்தான முன்னுதாரணம்!- POCSO கீழான பாலியல் வழக்கில் மும்பை ஐகோர்ட் தீர்ப்பு நிறுத்திவைப்பு
’’அம்மாவின் ஆட்சியமைக்க வீர சபதம் ஏற்போம்’’ - முதலமைச்சர் பழனிசாமி
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!