கட்டுக்கட்டாக 100 கோடி ரூபாய்‌ மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் 

கட்டுக்கட்டாக 100 கோடி ரூபாய்‌ மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் 
கட்டுக்கட்டாக 100 கோடி ரூபாய்‌ மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் 

தெலங்கானாவில் 100 கோடி ரூபாய்‌ மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

தெலங்கானா கட்டுக் கட்டாக குவித்து ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அத்தனையும் செல்லாத 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகள். அதைத்தான் வங்கிகளிடம் ஒப்படைத்து விட்டோமே இங்கே எப்படி? என யோசிக்க வேண்டாம். இவை அத்தனையும் கள்ள நோட்டுகள். புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளைப் போலவே அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாற்றுவது தானே காலங்காலமாக நடக்கும் மோசடி.

ஆனால், தெலங்கானாவில் புழக்கத்தில் இல்லாத 500, ஆயிரம் ரூபாயை போலியாக அச்சடித்து கொடுத்து சாமர்த்தியமாக ஏமாற்றியுள்ளது ஒரு கும்பல். தெலங்கானா மாநிலம் சத்துபள்ளி பகுதியில் கடந்த ஒன்றாம் தேதி கள்ள நோட்டு மாற்ற முயன்ற ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரிக்க, அவர்‌ அளித்த தகவலின்படி கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 7 கோடி ரூபாய்க்கான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை காவல்துறையினர் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்தனர்.

கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் தலைமறைவாகி விட்டனர். அந்த 6 பேரிடம் நடத்திய தொடர் விசாரணையில் தான், செல்லாத ரூபாய் நோட்டுகளை, அதுவும் கள்ள நோட்டுகளை செல்லுபடியாக வைத்த விஷயம் தெரியவந்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செல்லாது என விரைவில் மத்திய அரசு அறிவிக்க உள்ளதாவும், பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளே மீண்டும் புழக்கத்திற்கு வர உள்ளதாகவும் கூறி கள்ள நோட்டு கும்பல் சிலரை ஏமாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கறுப்பு பணம் வைத்துள்ளவர்களை அணுகி, அவர்களிடம் பெருந்தொகையை 2 ஆயிரம் ரூபாயாக பெற்றுக்கொண்டு, அவற்றிற்கு பதிலாக பழைய 500, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அளித்துள்ளனர். இதில் ஹைலைட் என்னவென்றால், ரூபாய் நோட்டுகளை மாற்ற 20 சதவீதம் கமிஷனையும் அந்த கும்பல் பெற்றுள்ளது. 

கள்ள நோட்டு கும்பல் அளித்த 500, ஆயிரம் ரூபாய் கட்டுகளின் மேலே இருந்த முதல் இரண்டு நோட்டுகள் மட்டும் உண்மையான ரூபாய் நோட்டுகளாக இருந்ததால், வாங்கியவர்கள் எளிதில் ஏமாந்துவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மர்கபாடு  பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com