ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.
சிரியாவின் பரிஷா பகுதியில் பதுங்கியிருந்த பாக்தாதி மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. அப்போது, தான் பிடிபடாமல் இருக்க, கடந்த மாதம் 26 ஆம் தேதி உடையில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டார் பாக்தாதி.
(ராஸ்மியா)
இதையடுத்து அவரது சகோரி ராஸ்மியா அவாத் (Rasmiya Awad) அவரது கணவர் மற்றும் உறவினர்கள் துருக்கி அதிகாரிகளால், வடக்கு சிரியாவின் அஸாஸ் நகரில் கைது செய்யப்பட்டனர். ராஸ்மியா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இயங்குவதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, பாக்தாதியின் மனைவியும் கைது செய்யப்பட்டிருப்பதாக துருக்கி அதிபர் எர்டகன் தெரிவித்துள்ளார். அங்காரா நகரில் இதை அறிவித்த எர்டகன், கைது செய்யப்பட்டவரின் பெயர் உள்ளிட்ட தகவல்களை குறிப்பிடவில்லை.
Loading More post
தொகுதி பங்கீடு : அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி