தன்னுடைய தாய்க்கு அழகான ஆண் துணை வேண்டும் என்று இளம் பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாம் 21வது நூற்றாண்டில் வாழ்ந்து வந்தாலும் விதவை மற்றும் கணவனை பிரிந்து விவாகரத்து பெற்று வாழும் பெண்கள் மீதான சமுதாயத்தின் பார்வை இன்னும் பெரிய அளவில் மாறவேயில்லை. இப்படியான பெண்கள் மறுதினம் என்பது இன்றளவும் மிகப்பெரிய விஷயமாக உள்ளது. மற்ற பெண்களை போல் இவர்களை பார்ப்பதில்லை என்பதால், இவர்களின் எதிர்கால வாழ்க்கை பல நேரங்களில் கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில்தான், இளம் பெண் ஒருவர் தன்னுடைய 50 வயது தாய்க்கு துணை வேண்டுமென ட்விட்டரில் கோரிக்கை விடுத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டக் கல்லூரி மாணவியான அஸ்தா வர்மா தன்னுடைய ட்விட்டரில், “என்னுடைய அம்மாவிற்கு 50 வயதுடைய அழகான ஆண் துணையை தேடுகிறோம். வெஜிடேரியன், குடிப்பழக்கம் இல்லாதவர், எல்லோருக்கும் தெரிந்தவர் ஆக அவர் இருக்க வேண்டும்” என #Groomhunting என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டிருந்தார்.
அஸ்தா வர்மாவின் இந்த முயற்சிக்கு ட்விட்டரில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதில் சிலரது ட்விட்டர் பதிவுகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு வைரலாகியுள்ளது.
இளம் பெண்ணின் இந்த ட்விட்டர் பதிவு பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
கொரோனா தடுப்பூசி இலவசம் என நான்கு மாநிலங்கள் அறிவிப்பு!
மேற்குவங்க 6-ஆம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ