வேலூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் அகரம் புதுமனை கிராமத்தில் வசிக்கும் தம்பதி அருள்-அனிதா. இவர்களின் இரண்டாவது மகன் அரிஷ் (8). இவரைக் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக மராட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். பின்னர் அங்கிருந்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த பிறகு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு அறிகுறி இருப்பதாகக்கூறி தீவிர சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பங்குப்பம் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஆம்பூர் வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் சிறுவனின் சொந்த கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தனர். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அவர்களை சிறைப்பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Loading More post
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
“நடிகர் விவேக்கின் உடல்நலக் குறைவுக்கு தடுப்பூசி காரணம் அல்ல” - மருத்துவமனை விளக்கம்
பிரான்ஸுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்... டிஎல்பி கட்சிக்கு 'அஞ்சும்' இம்ரான் அரசு!
உ.பி: ஞாயிறுகளில் ஊரடங்கு; முகக்கவசம் அணியாமல் 2-ம் முறை சிக்கினால் ரூ.10,000 அபராதம்
விலை வீழ்ச்சியால் வேதனை: ஏரியில் தக்காளியை கொட்டும் கிருஷ்ணகிரி விவசாயிகள்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்