திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா செல்ல இருந்த விமானம் தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் தினந்தோறும் காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு சென்று, மீண்டும் திருச்சியிலிருந்து 9.25 மணிக்கு கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டுச் செல்லும். இந்த விமானம் இன்று காலை 8.55 மணிக்கு வழக்கம்போல் திருச்சிக்கு வந்து இறங்கியது. மீண்டும் புறப்படுவதற்கான பணிகள் மேற்கொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் இந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 87 பயணிகளும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று இரவு 10.30 மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பழுதான விமானத்தை சரிசெய்ய, தொழில்நுட்ப வல்லுநர்கள் மலேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு சரி செய்து நாளை காலை நான்கு மணி அளவில் மலேசியா நோக்கி செல்லும் என விமான நிறுவனத்தின் சார்பில் தெரிவித்தனர்.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!