தேக்கடியில் நீர்த்தேக்கப் பகுதிகளில் உலாவரும் மிளா வகை மான்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகின்றன.
தென்மேற்குப் பருவமழை மற்றும் அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தேக்கடி ஏரியில் தண்ணீர் மட்டம் உயர்ந்துள்ளது. ஏரியின் கரைகளில் பசும்புற்கள் செழித்து வளர்ந்துள்ளன.
அதோடு, தேக்கடி ஏரிக்கரைகளில் துளிர்விட்டிருக்கும் புற்கள் பசுமை போர்த்தியுள்ளன. இதையடுத்து மேய்ச்சலுக்காகவும், தண்ணீர் குடிக்கவும் தேக்கடியின் சிறப்பு பெற்ற "சாம்பார்" இன மிளா வகை மான்கள் கூட்டம் கூட்டமாய் அணிவகுத்து தேக்கடி ஏரிக்கரைக்கு வந்து செல்கின்றன.
அழகாக அணிவகுக்கும் மிளாக்கள், ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகளுக்கு காட்சி விருந்து படைக்கின்றன. வன விலங்குகளின் நடமாட்டத்தைக் காண்பதற்காகவே படகு சவாரி செய்பவர்களை இந்த மிளா மான்கள் ஏமாற்றுவதில்லை. இவற்றை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள், அவற்றை புகைப்படம் எடுத்தும் மகிழ்கின்றனர்.
Loading More post
“சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு என்பது ஐயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது” - சீமான்
கொரோனா தடுப்பூசி செலுத்திய ஆறு நாட்களுக்கு பிறகு சுகாதார பணியாளர் மரணம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: முதல் பரிசு வென்றவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி
“கீழடியில் 7-ஆம் கட்ட அகழாய்வு பிப்ரவரியில் தொடங்கும்” - தமிழக தொல்லியல்துறை
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பிஸினஸ் ஸ்கூட்டர்; அசத்தும் வசதிகள்
அமெரிக்க அதிபர் பைடனின் தொடக்க உரையை செதுக்கிய இந்தியர்... யார் இந்த வினய் ரெட்டி?!
வதந்திகளை நம்பாதீர்.. தடுப்பூசி செலுத்திக் கொண்ட மருத்துவரின் அனுபவப் பகிர்வு
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’