மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி ஈடுபடுவதால் அங்கு பாஜக வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி என உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் சந்திக்கும் மகாராஷ்ட்ராவில் அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
மகாராஷ்டிராவின் உமர்கேட்டில் பாஜக வேட்பாளர் நமதேவ் சசானேவை ஆதரித்து யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேரணியில் பேசிய அவர், “பயங்கரவாதத்தை ஒழிப்பதில் பிரதமர் மோடி உறுதி கொண்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததன் மூலம் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ‘ஒரு இந்தியா, உயர்ந்த இந்தியா’ என்ற கருத்தை நிறுவியுள்ளனர்.
ராகுல் காந்தி எந்தக் கட்சியை ஆதரித்தாலும் அது தோல்வியடையும். காங்கிரஸ் கட்சியை ஆதரித்து ராகுல்காந்தி பரப்புரையில் ஈடுபடுவதால் மகாராஷ்டிராவில் பாஜக வெற்றி பெறுவது நூறு சதவீதம் உறுதி. விவசாயிகளின் நலனுக்காக விரைவான திட்டங்களை கொண்டுவர பாஜகவுக்கு வாக்களியுங்கள்.” எனத் தெரிவித்தார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!