நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் சந்திக்கும் மகாராஷ்ட்ராவில் மோடி மற்றும் ராகுல்காந்தி தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை ராஜினாமா செய்து 5 மாதங்கள் கழித்து தனது முதல் பரப்புரையை தொடங்கியுள்ளார் ராகுல்காந்தி.
இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பரப்புரையில் பேசிய ராகுல்காந்தி “நிலவுக்கு ராக்கெட் அனுப்புவதால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு அது உணவளிக்காது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் காங்கிரஸ் அரசால் நிறுவப்பட்டது. இஸ்ரோவில் இருந்து ராக்கெட்டுகளை அனுப்ப பல ஆண்டுகள் தேவைப்பட்டன. இஸ்ரோவின் நன்மைகளை தனக்கு சாதமாக்கிகொள்கிறார் பிரதமர் மோடி.
வாகனத்துறை, ஜவுளித் துறை, வைர தொழில் ஆகியவை முடிந்துவிட்டன. ஆனால் நீங்கள் ஊடகங்களில் இது எதையும் காண முடியவில்லை. மோடி இதைப் பற்றி எதுவும் பேசவில்லை. 40 ஆண்டுகளில் தற்போது கடுமையான வேலையின்மை நிலவுகிறது. இளைஞர்கள் வேலை கேட்கும்போதெல்லாம், அரசாங்கம் நிலவை பார்க்கச் சொல்கிறது. அரசு சட்டப்பிரிவு 370 குறித்தும் நிலவை பற்றியும் பேசுகிறது. ஆனால் நாட்டை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து மவுனமாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்