யூ டியூப் வீடியோ பார்த்து வங்கி ஏடிஎம்யை கொள்ளை அடிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் காவல் துறையினரிடம் சிக்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் கீழ் படப்பை கரசங்கால் பகுதியில் அமைந்துள்ளது பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏடிஎம். இந்த ஏடிஎம்மில் இரண்டு வாலிபர்கள் கதவினை மூடி விட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சித்தபோது அதிலுள்ள சிக்னல் மூலம் மும்பை தலைமை அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது.
இதையடுத்து மும்பை அலுவலகத்தில் இருந்து ஓட்டேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். ஓட்டேரி மற்றும் மணிமங்கலம் காவல்துறை விரைந்து வந்து கொள்ளை அடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்களையும் கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த இறையன்பு மற்றும் யோகேஷ் என்பதும் தனியார் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் யூடியூப் சேனலில் ஏடிஎம் செண்டரில் கொள்ளை அடிப்பது குறித்த தகவல் வீடியோவை பார்த்து முயற்சித்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏடிஎம்களில் கொள்ளையடிக்க இணையதளத்தை பார்த்து கற்றுக் கொண்டதாக அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இது போன்று ஏதேனும் வங்கி கிளைகளில் முயற்சி செய்து உள்ளனரா என மணிமங்கலம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?