பிஎம்சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி மோசடி புகாரில் சிக்கியுள்ளது.
தாங்கள் கொடுத்த கடன்களை மறைப்பதற்காக 21ஆயிரம் போலியானக் கணக்குகளை பிஎம்சி உருவாக்கியுள்ளது எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மும்பை காவல்நிலையத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்.
21ஆயிரம் போலி கணக்குகள் மூலமாக (616 மில்லியன் டாலர்கள்) இந்திய ரூபாய் மதிப்பில் 4355 கோடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு தனி நிறுவத்துக்கு மட்டும் 44 வங்கி கடன்கள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியின் உண்மையான நிதி நிலை மறைக்கப்பட்டுள்ளது என்றும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
21 ஆயிரம் கணக்குகள் மூலம் கொடுக்கப்பட்ட கடன் விவரங்கள் எதுவும் முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றும், கணினி கணக்குகளிலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த மோசடிப் புகாரில் வங்கியின் தலைவர் வர்யாம் சிங் மற்றும் இயக்குநர் ஜாய் தாமஸ் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நிதி மோசடி, ஆவணங்களை மறைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி மீது கடந்த ஆண்டு மோசடி புகார் எழுந்தது. அந்தப் புகாருக்கே இன்னமும் தீர்வு காணப்படாத நிலையில் தற்போது பிஎம்சி வங்கி மீது மோசடி புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
Loading More post
போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
லிங்கன் முதல் ஜெபர்சன் வரை: அமெரிக்க வரலாற்றில் மறக்க முடியாத 4 பதவியேற்பு விழா!
”சசிகலா விடுதலைக்கு பின்பும் எனது ஆட்சியே” - ஸ்டாலின் கருத்துக்கு முதல்வர் பதிலடி
சட்டமன்றத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? – ஸ்டாலின் பதில்!
வெளியானது வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்
PT Web Explainer: 'மீட்பர்' வரிசையில் இந்தியா... தடுப்பூசிக்கு ஏழை நாடுகள் எங்கே போகும்?
'சசிகலாவை இணைக்கணும்', 'இணைக்கக்கூடாது' - அதிமுகவின் பிளவும் பழனிசாமியின் 'நகர்வு'களும்!
அமெரிக்க அதிபர் நிர்வாகத்தில் பதவியேற்பு எந்த அளவுக்கு முக்கியமானது? - ஒரு பார்வை
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி