ஷிகர் தவான் விமானத்தில் செய்த நிகழ்வை ரோகித் ஷர்மா வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. மூன்றாவது போட்டி நாளை பெங்களூருவில் நடைபெற்ற உள்ளது. இப் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் விமானம் மூலம் பெங்களூரு சென்றனர். அத்துடன் அங்கு தீவிர வலை பயிற்சியிலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்திய வீரர்கள் ஒன்றாக சேர்ந்து விமானத்தில் பயணித்தபோது ஷிகர் தவான் எப்படி நடந்து கொண்டார் என்பதை ரோகித் ஷ்ரமா ஒரு வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். இதனை ரோகித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஷிகர் தவான் என்னிடம் பேசவில்லை. அத்துடன் கற்பனை நண்பனிடம் பேசும் அளவிற்கு இவருக்கு வயதும் அதிகமாகிவிட்டது” எனக் கூறி இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவிற்கு ஷிகர் தவான் பதிலளித்துள்ளார். அதில், “நான் ஒரு கவிதையை சொல்லி பழகிக் கொண்டிருந்தபோது என்னை ரோகித் வீடியோ எடுத்து விட்டார். நான் விளையாட்டாக ஒரு கவிதையை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தக் கவிதையை நான் இன்னும் கூட சரியாக சொல்லி பழகி இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?