நிலவில் இரவு தொடங்கியிருப்பதால் சந்திரயான்-2 விண்கலத்தின் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மிக குறைவு என்று அறிவியல் பேராசிரியர் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயற்சி செய்தது.
எனினும் நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரோ தலைவர் சிவனும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவித்தார். அத்துடன் ஆர்பிட்டர் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று முதல் நிலவின் இரவு தொடங்குகிறது. எனவே விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அறிவியல் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயற்பியல் பேராசிரியர் நிருபம் ராய் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,“நிலவில் இன்று முதல் இரவு தொடங்குகிறது. இதனால் அங்கு வெப்பநிலை -180 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும். இந்தச் சூழலில் விக்ரம் லேண்டரிலுள்ள தொழிநுட்ப சாதனங்கள் செயல்படுவது கடினம். அத்துடன் விக்ரம் லேண்டரின் ஆயுட் காலம் 14 நாட்கள் மட்டுமே ஆகும். அதாவது நிலவில் பகல் இருக்கும் 14 நாட்கள் மட்டுமே இது வேலை செய்யும்.
நிலவில் இரவில் அது வேலை செய்யவேண்டும் என்றால் லேண்டரை குளிரிலிருந்து பாதுகாக்க சில உபகரணங்கள் தேவைப்படும். அது விக்ரம் லேண்டரில் பொருத்தப்படவில்லை. ஆகவே விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ளும் வாய்ப்பு மிகவும் குறைவு” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு