போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆசிரியரை தங்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்ததை கண்டித்து மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம் புதன்சந்தை அருகே சத்துணவு அமைப்பாளருடன் தகாத முறையில் நடந்து கொண்டதாக இடைநிலை ஆசிரியர் சரவணனை வகுப்பறைக்குள் புகுந்து மக்கள் தாக்கிய சம்பவம் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது. இதனிடையே, பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியர் சரவணன் பாலியல் தொல்லை தந்ததாக அளித்த புகாரில் ஆசிரியர் சரவணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆசிரியர் சரவணன் கூத்தமூக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு இடமாற்றம்செய்யப்பட்டார். இதனைக் கண்டித்து அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் எதிர்ப்பு தெரிவத்துள்ளனர். போக்சோவில் வழக்குப் பதியப்பட்ட ஆசிரியரை தங்கள் பள்ளிக்கு மாற்றாமல் அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
Loading More post
கொரோனா காலத்தில் 5 மாநிலத் தேர்தல்கள்: 3 புதிய நடைமுறைகள் அறிவிப்பு!
தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
தமிழகத்தில் ஏப்ரல் 6-ல் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு
வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம்!
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்