சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளரை தாக்கிய புகாரில் மதிமுக மாவட்டச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதிமுக சார்பில் கடந்த 15ஆம் தேதி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெற்றது. இதற்காக சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் மதிமுகவினர் கொடிகள் மற்றும் சிறிய பதாகைகளை வைத்திருந்தனர். அவற்றை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் வரதராஜன் மற்றும் ஊழியர்கள் அகற்றியுள்ளனர்.
அப்போது அங்கு வந்த மதிமுகவினர் வரதராஜன் உள்ளிட்டோரை தாக்கியதாகத் தெரிகிறது. இதுகுறித்து வரதராஜன் அளித்த புகாரின் பேரில் மதிமுக தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மாநகராட்சி அதிகாரி காயம் பட்டிருப்பதை அறிந்து வருந்துவதாக தெரிவித்தார். அதேசமயம் மதிமுகவினரும் காயமடைந்திருப்பதாக குறிப்பிட்டார்.
Loading More post
10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரியங்கா காந்தி
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: உத்தர பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு
தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பிய சென்னை போக்குவரத்து காவல்துறை
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்