ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி, தொடரை சமன் செய்துள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 2-க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 294 ரன்களும், ஆஸ்திரேலியா 225 ரன்களும் எடுத்தன. 2-வது இன்னிங்சில் 329 ரன்கள் குவித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்காக 399 ரன்களை நிர்ணயித்தது.
நேற்று நடைபெற்ற 4-வது நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வேட் 117 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி, தொடரை 2- 2 என்ற கணக்கில் சமன் செய்தது. இங்கிலாந்து வீரர்கள் ஸ்டீவர்ட் பிராட், ஜேக் லீச் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர். தொடர் நாயகன் விருது ஸ்மித்துக்கு வழங்கப்பட்டது.
ஆஷஸ் தொடர் 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு டிரா ஆகியுள்ள நிலையில், கடந்த முறை சாம்பியன் என்ற முறையில் ஆஸ்தி ரேலியாவுக்கு கோப்பை வழங்கப்பட்டது.
Loading More post
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?